எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பாட்ரிசியா ரேபோன்கட்டுரைகள்

விடாமுயற்சி பீட்சா

பன்னிரண்டாம் வயதில், இப்ராஹிம் மேற்கு ஆபிரிக்காவில் இருந்து இத்தாலிக்கு வந்தார். இத்தாலிய மொழி எதுவும் தெரியாமல், திணறலுடன் போராடி, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. ஆனால் தன்னுடைய இருபதுகளில், இத்தாலியின் ட்ரெண்டோவில் பீட்சா கடையைத் திறந்த இந்த கடின உழைப்பாளி இளைஞனை அந்த போராட்டங்கள் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. உலகின் முதல் ஐம்பது பிட்சா வியாபாரங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்படுவதற்கு அவரது சிறிய வணிகம் தகுதிபெற்றது.  

இத்தாலிய தெருக்களில் பசியுள்ள குழந்தைகளுக்கு உணவளிக்க உதவுவது அவரது நம்பிக்கையாக இருந்தது. எனவே அவர் ஒரு நியோபோலிடன் பாரம்பரியத்தை விரிவுபடுத்த முயற்சித்தார். அதாவது, அங்ஙனம் பசியில் உள்ளவர்களுக்காக மக்கள் கூடுதல் காபியையோ அல்லது பீட்சாவையோ வாங்கிக்கொடுக்கலாம் என்னும் வழக்கம். புலம்பெயர்ந்த அகதிகள், அவர்களின் கடந்தகால பாரட்பட்சங்களில் சிக்கிகொண்டு சோர்ந்துபோய்விடாதபடிக்கு அவர்களை ஊக்கப்படுததுவதே அவரின் நோக்கமாயிருந்தது. 

இத்தகைய விடாமுயற்சி, அனைவருக்கும் தொடர்ந்து நன்மை செய்யும்படிக்கு கலாத்தியர்களுக்கு பவுல் போதித்த போதனைகளை நினைவுபடுத்துகிறது. “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்” (கலாத்தியர் 6:9). மேலும் பவுல், “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்” (வச. 10) என்று வலியுறுத்துகிறார். 

அநீதிகள் மற்றும் மொழி தடைகளை எதிர்கொண்ட புலம்பெயர்ந்த இப்ராஹிம், நல்லது செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கினார். உணவு, சகிப்புத்தன்மை மற்றும் புரிதலுக்கு வழிவகுக்கும் பாலமாய் மாறியது. அத்தகைய விடாமுயற்சியால் ஈர்க்கப்பட்டு, நாமும் நல்லதைச் செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடலாம். நம்முடைய விடாமுயற்சியுடன் நாம் வேலைசெய்யும்போது, அதின் மூலம் தேவன் மகிமைப்படுகிறார். 

கிறிஸ்து நம் மெய்யான ஒளி

“ஒளியை நோக்கி செல்வோம்!” ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியானவேளையில் நகரத்தில் இருக்கும் ஒரு பெரிய மருத்துவமனைக்கு வழிதெரியாமல் நாங்கள் திகைத்தபோது. என்னுடைய கணவர் இப்படியாய் சொன்னார். நாங்கள் ஒரு சிநேகிதரைப் பார்க்கச் சென்றிருந்தோம். நாங்கள் ஒரு லிஃப்டில் இருந்து வெளியேறியபோது, அந்த வாரயிறுதி நாட்களில் நாங்கள் செல்ல வேண்டிய திசைக்கு அந்த மங்கிய வெளிச்சத்தில் எங்களுக்கு வழிகாண்பிக்க யாரும் அங்கில்லை. எங்கள் குழப்பத்தைப் பார்த்த ஒரு மனிதரை இறுதியாக சந்தித்தோம். “இந்த நடைபாதைகள் அனைத்தும் ஒரே மாதிரியாகவே இருக்கும், ஆனால் வெளியே செல்லுவதற்கான வழி இதுவே” என்று அவர் கூறினார். அவரது வழிகாட்டுதலுடன், நாங்கள் வெளியேறும் கதவுகளைக் கண்டோம். பிரகாசமான சூரிய ஒளியை நாங்கள் வந்தடைந்தோம். 

குழப்பமடைந்த, அவிசுவாசிகளை அவர்களுடைய ஆவிக்குரிய இருளிலிருந்து தம்மைப் பின்பற்றும்படிக்கு இயேசு அழைத்தார். “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” (யோவான் 8:12). அவரது ஒளியில், தடுமாற்றங்கள், பாவம் ஆகியவைகள் தென்பட்டாலும், அவற்றை அகற்றும்படிக்கு நாம் அவரிடத்தில் கேட்கும்போது, அத்தகைய இருளை நம்முடைய வாழ்க்கையை விட்டு அவர் அகற்றுவார். வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களை வழிநடத்திய அக்கினி ஸ்தம்பத்தைப்போல, கிறிஸ்துவின் ஒளி நமக்கு கடவுளின் பிரசன்னம், பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதலைக் கொண்டுவருகிறது.

யோவான் விளக்கியது போல், இயேசுவே “மெய்யான ஒளி" (யோவான் 1:9). “இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை” (வச. 5). வாழ்க்கையில் அலைந்து திரிவதற்குப் பதிலாக, நம்முடைய பாதையில் ஒளிகாட்டும் அவரைச் சார்ந்துகொள்வது சிறந்தது. 

நம்பிக்கைக்கு இணங்குதல்

ஒரு குளிர்காலக் காலையில் கண்மூடித்தனமான காட்சியை நான் எதிர்கொள்ள நேரிட்டது. ஒரு மேகத்தினாலான சுவர். “உறைந்த மேகம்” என்று வானிலை முன்னறிவிப்பாளர் அதை அழைத்தார். எங்கள் இருப்பிடத்திற்கு அரிதாக, இந்த மேகச் சுவர் இன்னும் பெரிய ஆச்சரியத்தை அளித்தது. நீல வானம் மற்றும் சூரிய ஒளியும் இன்னும் ஒருமணி நேரத்திற்குள் வந்துவிடும் என்று வானிலை அறிக்கை வெளியிடப்பட்டது. “இது சாத்தியமேயில்லை” என்று என் கணவரிடம் சொன்னேன். “எங்களால் ஒரு அடி முன்னால் பார்க்க முடியவில்லை.” ஆனால், ஒரு மணி நேரத்திற்குள், அந்த மேச்சுவர் மறைந்தது. வானம் ஒரு சூரிய ஒளியோடு கூடிய ஒரு தெளிவான நீல நிறமாக மாறியது.

ஒரு ஜன்னலில் நின்று, நான் வாழ்க்கையில் இதுபோன்ற மேகச்சுவரை மட்டுமே பார்க்க முடிகிறதே என்று என் நம்பிக்கையின் அளவை யோசித்தேன். “நான் கண்ணால் காண்கின்றவைகளை வைத்தே தேவனை நம்பிகிறேனா?” என்று என் கணவரிடம் கேட்டேன். 

எசேக்கியா ராஜா மரித்த பின்பு, சில கறைபடிந்த ராஜாக்கள் ஆட்சிக்கு வந்தபோது, ஏசாயாவும் இதே கேள்வியையே கேட்கிறார். யாரை நாம் நம்புவது? தேவன் ஏசாயாவுக்கு தரிசனத்தைக் கொடுத்து, எதிர்காலத்தில் நடக்கப்போகிறவைகளுக்காக தற்போது தேவனை நம்பலாம் என்று அவருடைய மனதை தேற்றுகிறார். ஏசாயா தீர்க்கதரிசி, “உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசாயா 26:3) என்று சொல்லுகிறார். அத்துடன் “கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்” (வச. 4) என்றும் வலியுறுத்துகிறார். 

நம்முடைய சிந்தை தேவனை மாத்திரம் நம்பும்போது, வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படும்போது கூட நம்மால் அவரை விசுவாசிக்கக்கூடும். அதை தற்போது நம்மால் தெளிவாய் பார்க்கமுடியாது. ஆனால் அவரை நாம் விசுவாசிக்கும்போது, நமக்கான உதவி நம்மை நோக்கி வருகிறது என்பதை உறுதியாய் விசுவாசிக்கக்கூடும். 

செயலில் இரக்கம்

பெஞ்சுகளை உருவாக்குவது ஜேம்ஸ் வாரனின் வேலை அல்ல. இருப்பினும், டென்வரில் பேருந்திற்காக காத்திருந்த ஒரு பெண் மண்ணில் அமர்ந்திருப்பதைக் கவனித்தபோது, பெஞ்சை செய்ய ஆரம்பித்தான். மக்கள் கீழே அமர்ந்திருப்பது கண்ணியமற்றது என்று வாரன் கவலைப்பட்டான். எனவே, இருபத்தெட்டு வயதான அவன், சில பழைய மரங்களைக் கண்டுபிடித்து, ஒரு பெஞ்சைக் கட்டி, பேருந்து நிறுத்தத்தில் வைத்தான். அது விரைவில் பழகிவிட்டது. தனது நகரத்தில் உள்ள ஒன்பதாயிரம் பேருந்து நிறுத்தங்களில் இருக்கைகள் இல்லாததை உணர்ந்த அவன், மற்றொரு பெஞ்சை உருவாக்கினான், பின்னர் அதுபோன்று பல இருக்கைகளை உருவாக்கி, அதில் “கனிவோடு இருங்கள்” என்று பொறித்து வைக்க ஆரம்பித்தான். அவனது இலக்கு? “என்னால் முடிந்த அளவிற்கு மக்களின் வாழ்க்கை முறையை சற்று மேம்படுத்த எண்ணினேன்” என்று பதிலளித்தானாம். 

அந்த செயலையே “இரக்கம்” என்றும் சொல்லலாம். இயேசு நடைமுறைப்படுத்தியபடி, இரக்கம் என்பது மிகவும் வலுவான ஒரு உணர்வு, அது மற்றொருவரின் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க நம்மை வழிநடத்துகிறது. அவிசுவாசமான ஜனங்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தபோது, “அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகி” (மாற்கு 6:34) அவர்களுக்கு உபதேசித்தார். அங்கிருந்த வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கியதினிமித்தம் அவர் அந்த இரக்கத்தை செயல்படுத்தத் துவங்கினார் (மத்தேயு 14:14). 

நாமும் “உருக்கமான இரக்கத்தை” தரித்துக்கொள்வோம் (கொலோசெயர் 3:12) என்று பவுல் வலியுறுத்துகிறார். அதன் பயன்கள்? “அது என்னுடைய சக்கரத்தில் காற்றை நிரப்புவதுபோல் என்னை நிரப்புகிறது” என்ற வாரன் சொல்லுகிறார். 

நம்மை சுற்றியிருப்பவர்கள் அனைவருக்கும் தேவைகள் இருக்கிறது. அதை தேவன் நம் கவனத்திற்கு கொண்டுவருகிறார். அந்த தேவைகள் நம்முடைய இரக்கத்தை செயல்படுத்தவும் கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்தவும் தூண்டுகிறது.

தேவனுடைய நித்திய திருச்சபை

“சபை முடிந்துவிட்டதா?” ஞாயிறு ஆராதனை முடிவடையும்போது, இரண்டு குழந்தைகளுடன் எங்கள் தேவாலயத்திற்கு வந்த ஒரு இளம் தாய் கேட்டார். ஆனால் வரவேற்பில் நின்றிருந்தவர், அருகாமையில் ஒரு திருச்சபை இருக்கிறது; அங்கே இரண்டு ஆராதனைகள் நடைபெறுகிறது. நீங்கள் அங்கே கடந்துசெல்லலாம் என்று அவளை வழிநடத்தினார். அங்கு செல்ல வாகன வசதியை விரும்புகிறீர்களா? என்று கேட்க, அந்த இளம் தாய் ஆம்! அந்த திருச்சபைக்கு என்னை கொண்டுபோய்விட்டால் நான் நன்றியோடிருப்பேன் என்றாள். அவள் போன பின்பு, அவளை வரவேற்ற அந்த நபர், “சபை முடிந்துவிட்டதா?” என்ற அவளுடைய கேள்வியை மனதிற்குள் தியானித்து, “தேவனுடைய சபை முடிவில்லாமல் எப்போதும் தொடரக்கூடியது” என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொண்டாராம்.

திருச்சபை என்பது உடைந்துபோகக்கூடிய ஒரு கட்டிடம் இல்லை. ஆகையால் பவுல் திருச்சபையைக் குறித்து பதிவிடும்போது, “நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்” (எபேசியர் 2:19-22) என்று எழுதுகிறார்.

இயேசு தன்னுடைய திருச்சபையை நித்தியத்திற்காய் ஸ்தாபித்திருக்கிறார். திருச்சபை இன்று சந்திக்கும் சவால்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், “பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” (மத்தேயு 16:18) என்று அறிக்கையிடுகிறார்.

இந்த ஊக்கப்படுத்தும் கண்ணாடி வழியாக, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாகும்பொருட்டு திருச்சபையையும் அதிலுள்ள அங்கத்தினர்களையும் நாம் பார்க்கலாம்.

ஆழமான தண்ணீர்

1992 இல் பில் பிங்க்னி தனியாக உலகம் முழுவதும் கடல் வழி பயணம் செய்தார், அவர் ஆபத்தான “கிரேட் சதர்ன் கேப்ஸைச்” சுற்றி உள்ளதான கடினமான பாதையில் சென்றார். அவர் ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக அவ்வாறு செய்தார். அவரது பயணம் குழந்தைகளுக்கான கல்வியை வலியுறுத்தி, ஊக்கம் அளித்தது. அவரது முன்னாள் சிகாகோ நகர தொடக்கப் பள்ளி மாணவர்களும் அதில் உள்ளடங்குவர். அவரது இலக்கு என்ன? கடினமாகப் படிப்பதன் மூலமும் அர்ப்பணிப்புடன் இருப்பதன் மூலமும், மாணவர்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதைக் காட்ட வேண்டும் என்பதே. அவர் தனது படகின் பெயரை அதற்கேற்றார் போலவே தேர்ந்தெடுத்தார் (அர்ப்பணிப்பு). பில், பள்ளி மாணவர்களை “அர்ப்பணிப்பு” என்ற படகில் கூட்டிச்செல்லும் போது இவ்வாறு கூறுகிறார், “உங்கள் கையில்தான் உழவு இயந்திரம் உள்ளது, நீங்கள் சுய கட்டுப்பாட்டுடன் உங்கள் குழுவுடன் இசைந்து கற்க வேண்டும்”. வாழ்க்கையில் வெற்றிபெற ஒருவருக்குத் தேவையான அனைத்து அடிப்படைகளையும் அவர் மாணவர்களுக்கு கற்றுத்தந்தார்.

 

பிங்க்னியின் வார்த்தைகள் சாலமோனின் ஞானத்தின் உருவப்படத்தை காட்டுகின்றன. ”மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்” (நீதிமொழிகள் 20:5). சாலமோன் மக்கள் தங்கள் இலக்குகளை ஆராய வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். இல்லையெனில், "அது ஒரு பொறி, "என சாலமோன் குறிப்பிடுகிறார். ”பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்” (வ.25).

 

இதற்கு மாறாக, பிங்க்னிக்கு ஒரு தெளிவான நோக்கம் இருந்தது, அது இறுதியில் அமெரிக்கா முழுவதும் உள்ள முப்பதாயிரம் மாணவர்களை அவரது பயணத்திலிருந்து கற்றுக்கொள்ளத் தூண்டியது. அவர் “நேஷனல் செய்லிங் ஹால் ஆஃப் ஃபேம்” இல்  சேர்க்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆனார். "குழந்தைகள் கவனித்துக் கொண்டிருந்தனர்," என அவர் கூறினார். இதே போன்ற நோக்கத்துடன், தேவன் நமக்குக் கற்றுக் கொடுக்கிற ஆழமான ஆலோசனையின்படியே நம் வாழ்க்கையை அமைப்போம்.

அவர் நம்மை புதிதாக்குகிறார்

ஒரு பயண நிர்வாகியாக, ஷான் சீப்லர் என்பவர் ஒரு வித்தியாசமான கேள்வியுடன் போராடினார். ஹோட்டல் அறைகளில் எஞ்சியிருக்கும் சோப்பு கட்டிகளை என்ன செய்வது? என்பதே அந்த கேள்வி. தூக்கியெறியப்படும் சோப்புத் துண்டுகளை மறுசுழச்சி செய்வதின் மூலம் அதற்கு மறுவாழ்வு கொடுக்க முடியும் என்று சீப்லர் நம்பினார். எனவே அவர் “கிளீன் தி வேர்ல்ட்” என்ற மறுசுழற்சி அமைப்பைத் தொடங்கினார். அது எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள் போன்றவற்றில் நிராகரிக்கப்பட்ட மில்லியன் கணக்கான பவுண்டுகள் சோப்புத் துண்டுகளை கிருமி நீக்கம் செய்யப்பட்டு புதிதாக வடிவமைக்கப்பட்ட சோப்புகளாக மாற்ற உதவியது. அந்த சோப்புத் துண்டுகள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தேவையுள்ள மக்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த சோப்புகள் சுகாதாரம் தொடர்பான வியாதிகள் மற்றும் மரணங்களிலிருந்து மக்களை பாதுகாக்கிறது குறிப்பிடத்தக்கது. 

சீப்லர் சொல்லும்போது, “இது கேட்பதற்கு விகற்பமாய் தெரியலாம், ஆனால் நீங்கள் தங்கியிருக்கும் அறையில் எஞ்சியிருக்கும் சிறிய சோப்பு துண்டானது ஒருவருக்கு வாழ்க்கைக் கொடுக்கலாம்” என்று சொல்லுகிறார். 

பயன்படுத்தப்பட்டு தூக்கியெறிப்பட்ட ஒன்றிற்கு வாழ்க்கைக் கொடுத்து புதிதாக்குவது நம்முடைய இரட்சகரான இயேசுவின் முக்கியமான ஒரு செய்கை. ஐந்து அப்பத்தினாலும் இரண்டு சிறிய மீன்களினாலும் ஐயாயிரம்பேரை இயேசு போஷித்த பின்பு, சீஷர்களைப் பார்த்து, “ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள்” (யோவான் 6:12) என்று சொல்லுகிறார். 

நம்முடைய வாழ்க்கையில் நாம் தூக்கியெறிப்படும்போது, இயேசு நம்மை வீணானவர்களாய் பார்க்காமல், நம்முடைய வாழ்க்கையை அற்புதமாய் பார்;க்கிறார். அவருடைய பார்வையில் நாம் எப்போதும் தூக்கியெறிப்படுவதில்லை. அவருடைய இராஜ்யத்திற்கு பயன்படும் திறனை நமக்குள் புகுத்துகிறார். “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின!” (2 கொரிந்தியர் 5:17). எது நம்மை புதிதாக்குகிறது? கிறிஸ்து நமக்குள் வாசம்பண்ணுவதே நம்மை புதியவர்களாய் மாற்றுகிறது. 

சிறியது ஆனால் சிறந்தது

“நான் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வேனா?” கல்லூரியின் ஒரு நீச்சல் வீராங்கனை அவளின் வேகம் மிகக் குறைவாக இருப்பதாகக் கவலைப்பட்டாள். ஆனால் கணிதப் பேராசிரியர் கென் ஓனோ அவளது நீச்சல் நுட்பங்களை ஆராய்ந்தபோது, அவளுடைய நேரத்தை ஆறு வினாடிகளுக்குள் எப்படி மேம்படுத்துவது என்று யோசித்தார். அதுவே போட்டியில்  அவளுடைய வெற்றிக்கு வழிவகுக்கக்கூடும். நீச்சல் வீராங்கனையின் முதுகில் சென்சார்களை இணைத்து, அவரது நேரத்தை மேம்படுத்த பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. அதற்கு பதிலாக, ஓனோ, சிறுசிறு காரியங்களை சரிசெய்ய முயற்சித்தார். நீரினுள் அவற்றை சரியாய் கடைபிடித்தால் வெற்றிக்கு ஏதுவான மாற்றங்களை மேற்கொள்ளலாம் என தீர்மானித்தார். 

ஆவிக்குரிய வாழ்க்கையில் சிறிய காரியங்களை சரிசெய்யும்போது, அது பெரிய மாற்றத்திற்கு நேராய் வழிநடத்தக்கூடும். சிறையிருப்பிற்கு பின்னர், செரூபாபேலோடு சேர்ந்து ஆலயக் கட்டுமான்ப பணியில் ஈடுபட்ட மீதியான இஸ்ரவேல் ஜனத்திற்கு சகரியா தீர்க்கதரிசியும் அதேபோன்ற ஒரு ஆலோசனையையே கொடுக்கிறார். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்” என்று சேனைகளின் கர்த்தர் செரூபாபேலுக்குச் சொல்லுகிறார் (சகரியா 4:6).

“அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?” (வச. 10) என்று சகரியா கேட்கிறார். தாங்கள் கட்டப்போகிற ஆலயம் சாலெமோனால் கட்டப்பட்ட ஆலயத்திற்கு நிகராகாது என்று இஸ்ரவேலர்கள் சோர்ந்துபோயிருக்கின்றனர். ஆனால் தன்னிலிருக்கும் சிறு சிறு காரியங்களை மாற்றிக்கொண்டு ஓனோவின் நீச்சல் வீராங்கனை எவ்வாறு ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம் வென்றாளோ, அதுபோல தேவனோடு கூடிய சின்னஞ்சிறு முயற்சிகள் கூட தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தக்கூடும் என்பதை செரூபாபேலின் கூட்டம் விசுவாசித்தது. தேவனில் சிறியதும் சிறந்ததாய் மாறக்கூடும்.

தேவனால் அறியப்படுதல்

தத்தெடுப்பின் மூலம் பிரிந்த இரட்டைக் குழந்தைகள் இருபது ஆண்களுக்குப் பின் இணைவதற்கு மரபணு பரிசோதனை உதவியது. அதில் ஒருவனான கீரோன் வின்சென்ட்டுக்கு குறுஞ்செய்தி அனுப்பியபோது, அவன் “இது யார் புதிய நபராய் இருக்கிறதே?” என்று யோசித்தான். அவன் பிறக்கும்போது அவனுக்கு வைத்த பெயர் என்ன என்று கீரோன் கேட்டபோது, வின்சென்ட் “டைலர்” என்று பதிலளித்தான். அப்போது அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதை அறிந்துகொண்டனர். அவன் தன்னுடைய பெயரினால் அறியப்பட்டான்!

உயிர்த்தெழுதல் சம்பவத்தில் பெயர் எவ்வளவு முக்கிய பங்காற்றுகிறது என்பதை பாருங்கள். மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து, இயேசுவின் சரீரத்தைக் காணாமல் அழுகிறாள். “ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்?” (யோவான் 20:15) என்று இயேசு கேட்கிறார். தன்னை கேள்வி கேட்பது யார் என்பதை அவர் “மரியாளே” என்று அழைக்கும் வரைக்கும் மரியாள் அறியாதிருந்தாள் (வச. 16).   

அவர் சொல்லுவதைக் கேட்ட மாத்திரத்தில் அவள் கண்ணீர் சிந்தி, “ரபூனி” (ஆசிரியர் என்று அர்த்தம்) என்று அரமாயிக் மொழியில் அழைத்தாள் (வச. 16). நம் உயிர்த்தெழுந்த கிறிஸ்து அனைவருக்காகவும் மரணத்தை வென்று, நம் ஒவ்வொருவரையும் அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டதை உணர்ந்து, உயிர்த்தெழுதல் பண்டிகையில் கிறிஸ்தவர்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சிக்கு ஒப்பாக அவளுடைய மகிழ்ச்சி இருந்தது. அவர் மரியாளிடத்தில், “நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன்” (வச. 17) என்று சொல்லுகிறார். 

ஜியார்ஜியாவில் இரண்டு சகோதரர்கள் தங்கள் பெயர்களின் மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல தீர்மானித்தனர். உயிர்த்தெழுதல் நாளின்போது, இயேசுவால் அறியப்பட்டவர்களுக்கு அவருடைய தியாகமான அன்பை காண்பிக்கும்பொருட்டு அவர் மேற்கொண்ட பெரிய முயற்சிக்காய் அவரை நாம் மகிமைப்படுத்துகிறோம். அந்த தியாயம் உனக்காகவும் எனக்காகவும் செய்யப்பட்டது. அவர் உயிரோடிருக்கிறார்.